Wednesday, November 30, 2011

சி.சு.செல்லப்பா


சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29">செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18">டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன்">வெங்கட் சாமிநாதன், பிரமீள்">பிரமீள், ந.முத்துசாமி">ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் "வாடிவாசல்", "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

மனைவியை வெல்லும் மந்திரங்கள் - 10

மனைவியை வெல்லும் மந்திரங்கள் - 10

1. அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.

2. அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.

3. சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.

4. சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது உங்களவளுக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ் வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.

5. வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

6. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.

7. எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.

8. சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

9. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

10. எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.

இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான். வாழ்க்கை முழுக்க சங்கீத சந்தோஷம்தான்.

இனி உங்கள் வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும்.

குருவிக்கரம்பை வேலு


வேதம் என்ற சொல்லைக் கேட்டவுடனே நம் மனத்திலே ஓர் உயர்ந்த எண்ணம் தோன்றுகிறது. வேதம் இறைவனால் அருளப்பெற்றது. வேதம் என்பது எழுதாக் கிளவி. வேதம் புனிதமானது. வேதத்தில் மாந்தர் வாழ வேண்டிய நெறிமுறைகள் கூறப் பெற்றுள்ளன. வேதத்திற்கு மேலான நூல் இல்லை. வேதம் கற்றவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். வேதத்தை அறிந்தவர்கள் இறைவனோடு ஒத்தவர்கள். அவர்கள் வேத வித்தகர்கள் என்று அழைக்கப்பெறுகிறார்கள். வேத நெறி பற்றிப் பேசுபவர்கள் வேதாந்திகள் என்று அழைக்கப் பெறுகிறார்கள். வேதாந்தம் என்ற சொல் வேதக் கொள்கை என்ற பொருளில் கையாளப் பெறுகிறது.

இந்த உலகம் நிலையற்றது. எல்லாம் அழிந்து விடும்.
ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல
பெண்டாட்டி பிள்ளையும்
சதம் அல்ல

என்றெல்லாம் பேசுபவர்களை - பாடுபவர்களை - பட்டினத்தார் போன்ற நிலையாமைக் கொள்கைகளைப் பாடியவர்களையெல்லாம் நாம் வேதாந்திகள் என்று அழைத்துப் பெருமைப்படுத்துகிறோம். பிற்காலத்தில் எழுந்த சமய நூல்கள், சாத்திர நூல்கள் எல்லாம் வேத சாரம் என்றும், வேதத்திற்கு நிகரானவை என்றும் போற்றப் பெற்றன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ் வேதம் என்று போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் தேவாரம் திராவிட வேதம் என்று பாராட்டப்படுகிறது.

திருக்குறளை வேதத்தோடு ஒப்பிட்டுப் புகழுகிற பல பாடல்கள் திருவள்ளுவ மாலையில் உள்ளன. உக்கிரப் பெருவழுதியார் என்ற புலவர் நான்கு மறைகளின் மெய்ப் பொருளைத் தான் வள்ளுவர் மூன்று பாலாகத் தந்திருக்கிறார் என்று கூறுகிறார். மாங்குடி மருதனார் என்ற புலவர் திருக்குறள் வேதத்தின் உட்பொருளாய் விளங்குகிறது என்று பாராட்டுகிறார். செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் எனும் புலவர் வேதக் கருத்தைத் திருக்குறள் விரித்துரைக்கிறது என்று கூறுகிறார். சிறந்த நூல்களையெல்லாம் வேதத்தோடு ஒப்பிட்டுக் கூறுகின்றமையால், வேதம் மிகச் சிறந்த நூல் என்பது சொல்லாமலே நிறுவப்பட்ட உண்மையாகி விட்டது.

இப்படிப்பட்ட மிகச் சிறந்த வேதத்தைப் படித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு குருவிக்கரம்பை வேலு முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆர்வம் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன் இப்படி அவர் முயன்றிருப்பாரேயானால், நடுத் தெருவில் நிறுத்தி வைத்துக் கல்லால் அடித்துப் போடப்பட்டிருப்பார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பாரேயானால், அவர் நாவில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியிருப்பார்கள். அதைக் கேட்டவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி யிருப்பார்கள். ஏனென்றால் அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும் தான் வேதத்தைப் படிக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் படிக்க அருகதையற்றவர்கள் என்றும், அவர்கள் படிப்பது குற்றம் என்றும் கட்டுப்பாடு இருந்தது. மனுதர்மம் இதற்கு விதிமுறைகளை வகுத்திருந்தது.

இப்பொழுது காலம் மாறிக் கட்டுப்பாடெல்லாம் தளர்ந்து விட்டபடியால், வேலு எடுத்த முயற்சி வெற்றி பெற்று விட்டது. தமிழிலேயே ஏற்கெனவே மொழி பெயர்ப்பு நூல்கள் வந்து விட்டபடியால் வேலு அவர்களால் எளிதாக வேதத்தைப் படிக்க முடிந்தது. தமிழில் மொழி பெயர்ப்பைச் செய்திருந்தவர்கள் கம்பத்தனம் செய்திருப்பதாகத் தோன்றவே, ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியை நாடியிருக்கிறார் வேலு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வேதத்தைக் கொண்டு வந்திருக்கிறார் வேலு. இதுதான் வேதம் என்று நமக்கு எடுத்துக் காட்டி விட்டார்.

வேதங்கள் நான்கு. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பனவே அந்த நான்மறைகள். ரிக்தான் தலைமை வேதம். ரிக் என்றால் துதித்தல் என்று பொருள் (அபிதான சிந்தாமணி). துதிப் பாடல்கள் அடங்கியது ரிக்வேதம். ரிக் வேதத்தின் விரிவாகவும், விளக்கமாகவும், வளர் நிலையாகவும் எழுந்தனவே மற்ற மூன்று வேதங்களும். யசுர்வேதம், ரிக் வேதத்தையொட்டி, நைவேத்தியங்கள் வேள்விகள் செய்யும் முறைகளைக் கூறுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு தோத்திரமாக அமைந்துள்ளது. சாமவேதம் பாப நிவாரணமான தோத்திரங்கள் கொண்டது. அதர்வண வேதம் சபிக்கும் மந்திரங்கள் அடங்கியது. இந்த நான்கு வேதங்களில் முதன்மையானதாகத் திகழும் ரிக் வேதப் பாடல்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பையே இந்நூலில் காண்கிறோம்.

இனி வேதத்தின் உட்பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். இந்திரன், அக்கினி, சூரியன், சோமன், வாயு, உஷை, விஷ்ணு, ருத்திரன் ஆகிய தேவர்களைப் போற்றிப் பாடும் பாடல்களாக இவை அமைந்துள்ளன. தாசர்கள் அல்லது திராவிட மக்களை அழித்து ஒழித்து ஆரியர்களுக்குப் பல நன்மைகளையும் செய்து கொடுக்கும்படி ஒவ்வொரு தேவனையும் வேண்டும் பாடல்களாகவே இவை உள்ளன. ஆரியர்களின் கோட்பாடுகளுக்கு எதிரான திராவிடர்களை மட்டுமின்றி, நியாய உணர்வின் அடிப்படையில் ஆரியத் தலைவர்களை எதிர்த்து நின்ற ஆரியர்களையும் அழித்து ஒழிக்கும்படி தேவர்கள் வேண்டப்படுகிறார்கள்.
எடுத்துக்காட்டு:

இந்திரா! நீ சரயுவின் கரைக்கப்பால் வாழ்ந்து வந்த அர்ணன், சித்திராதன் ஆகிய ஆரியர்கள் இருவரையும் கொன்றாய். (ரிக். 3385)

எதிரிகளை அழிப்பதும், அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுமே இங்கு தெய்வச் செயலாகக் காட்டப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

இந்திரா! நீ சுசுணனின் கோட்டையை உடைத்தபோது அவனால் சேர்த்து வைக்கப்பட்டிருந்த செல்வக் களஞ்சியத்தையே எடுத்துச் சென்றாய். (ரிக். 3380)

வேத காலத்துத் திராவிடர்களுக்கு தெய்வமோ, மதமோ, சடங்குகளோ இல்லை என்ற உண்மை இந்த வேதத்திலிருந்து தெரிய வருகிறது.

எடுத்துக்காட்டு:

தெய்வ நம்பிக்கையற்ற - தேவனற்ற - சடங்குகள் செய்யாத - தாச இனத்தைப் பூண்டோடு அழித்துச் சாம்பலாக்க வானத்தையும் பூமியையும் அனலாக்கு. (ரிக். 4617)

இந்திரனே! தெய்வமற்ற - வேள்வி செய்யாத தாசர்கள் செல்வத்தை இழப்பார்களாக. அந்தத் தாசர்களைக் கண் காணாத இடத்திற்கு அனுப்பவும். (ரிக். 7594)

அக்கினியே! நீ தானங் கொடுக்காத அனைவரையும் சாம்பலாக்கவும். எல்லாப் பகைவர்களையும் சாம்பலாக்கவும். அரக்கர்களை எப்போதும் பற்பப்படுத்தவும். (ரிக். 441)

வேதப் பாடல்கள் முழுவதையும் படித்த பிறகு, “எல்லாப் பொருளும் இதன் பாலுள” என்ற மதுரைத் தமிழ் நாகனார் கருத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை. வெறுப்புணர்வையும், பகையுணர்வையும் வேற்றுமையுணர்வையும் வலியுறுத்துகின்ற இந்த வேதக் கருத்துக்களை நல்லெண்ணமுடைய யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு ரிக் பாடலும், வகுப்புத் துவேஷம், இன வெறி, மது வெறி, மத வெறி ஆகியவற்றின் பிறப்பிடமாக இருப்பதையே பார்க்கிறோம். திருக்குறளைப் போல் உலகுக்கெல்லாம் ஒரு பொது நெறியாக அமையாமல், ஒரு கூட்டத்தாரின் நன்மையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தன் இனமல்லாத யாரையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நச்சு மனப்பான்மை கொண்டு அமைந்துள்ளன இந்த வேதங்கள். இந்த உண்மையைத் தான் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரும்,

வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக் கொருநீதி?

என்று நியாயம் கேட்கிறார். இந்த வேதக் கருத்துக்களை நல்லெண்ணமுடைய யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் இனத்தாருக்குரிய மத நூலேயன்றி எல்லோருக்கும் உரிய அற நூல் ஆகாது. இதைப் பற்றி நாம் கொண்டிருந்த நல்லெண்ணங்கள் யாவும் சிதறிப் போய்விட்டன. தலை வேதமான ரிக்கே இப்படியென்றால், இதன் அடிப்படையில் தோன்றிய மற்ற யசுர், சாமம், அதர்வணம் எல்லாம் எப்படியிருக்கும்! நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது.

வேதத்தைப் போற்றிப் புகழ்ந்தவர்கள் அனைவரும் அதைப் புரட்டிப் பார்க்காமலே கற்பனைக் கருத்துக்களை அள்ளி விட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. முற்றும் கற்றவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கின்ற பல சான்றோர்களும் பேதை மக்காளாகி விட்டார்களே என்று வருந்த வேண்டியிருக்கிறது. வேத பாராயணம் செய்பவர்கள் அறிந்தோ அறியாமலோ வெறியுணர்வையும் வேற்றுமையுணர்வையும் கால காலமாக இடைவிடாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று கலங்க வேண்டியுள்ளது.

இந்நிலை தொடரவிடலாமா என்ற கேள்வியும் எழுகிறது. வேதப் பாடல்களை உள்ளது உள்ளபடியே மொழி பெயர்த்துக் கொடுத்து,
இதுதான் வேதம்! என்கிறார் வேலு. இதுதானா வேதம்? என்று திகைக்கிறோம் நாம்.

குருவிக்கரம்பை வேலுவின் ‘இதுதான் வேதம்’ நூலுக்கு அணிந்துரை.

ஆவிகள் உண்டா? இல்லையா?

ஆவிகள் உண்டா? இல்லையா?

jaggivasudev

ஆவிகள் உண்டா? இல்லையா?

I said ‘ Aaha’ when I read his answer in the pages of the book “ Mystic’s Musings” an year ago. And I happened to see similar context in Tamil. Thought of sharing the same with you all. Here it is for you ….

-

ஆயிரம் ஜன்னல் -


விகள் உண்டா? இல்லையா?

எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.

ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்துகொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடல் முடிந்துவிடவில்லை.

அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய் விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.

எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.

ஒரு முறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டுவந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்குச் சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?

மறு நாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுந்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழவைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதற்கப்புறம் அந்த வேலையில் ஈடுபடவில்லை.

பிற்பாடு, சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.

ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் ‘உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை’ என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும், என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.

தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.

உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.

அப்போது மட்டுமல்ல… பல சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.

ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும், இரண்டு கொம்பு முளைத்திருக்கும், உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.

ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் எல்லோரும் பாதிரியார் வரக் காத்திருந்தனர்.

திடீரென்று அங்கே சாத்தான் தோன்றியது.

சாத்தானைப் பார்த்ததும், அத்தனைக் குடும்பங்களும் பதறியடித்து எழுந்தனர். பயத்தில் கூச்சலிட்டபடி சிதறி ஓடினர். தேவாலயமே காலியாகிவிட்டது. ஒரே ஒரு மனிதன் மட்டும் சற்றும் கவலையின்றி அமர்ந்திருந்தான்.

சாத்தான் குழம்பியது. ”ஏய், நான் யார் என்று உனக்குத் தெரியுமா?”- அவனை அதட்டியது.

”நன்றாகவே…”

”அப்படியும் உனக்குப் பயமில்லையா?”

”பயமா… எதற்கு? இருபத்தேழு வருடங்களாக என் மனைவியோடு வாழ்ந்து பழகிவிட்டேன். உன்னைப் போன்ற சாதாரண சாத்தானைப் பார்த்து பயப்படுவேனா?” என்று பதில் வந்தது.

யிரோடு இருப்பவர்களைப் போல் கொடுமையானவை அல்ல ஆவிகள். அதற்காக நட்புகொண்டு, உங்கள் கேள்விகளுக்கு ஆங்கில எழுத்துக்களைக் கூட்டி வார்த்தைகளை அமைத்துத் தர அவை வருவதும் இல்லை.

கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

அப்பாவின் ஆவி வந்தது, பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல்ரீதியான எல்லா உறவு முறைகளும் அறுந்துவிடுகின்றன.

நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடர வல்லது.

கடவுளானாலும் ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்பது மறுப்பதும் முட்டாள்தனம்!

- ஜன்னல் திறக்கும்…

: Sadhguru Jaggi Vasudev’s article - taken from Ananda Vikatan. Thanks to Vikatan. : Source – Ananda Vikatan

கன்னியாகுமரி இ-தர்ஷன் மையம் மூலம் 7 ஆயிரம் பேர் திருப்பதி தரிசனம்!






Stay connected to temple.dinamalar.com

கன்னியாகுமரி : திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர மொளை தரிசிக்க கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அமைக்கப்பட்டுள்ள இ-தர்ஷன் மையம் மூலம் இதுவரை சுமார் 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். திருமலை திருப்பதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வர பெருமாளை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். திருவிழா காலம் மட்டுமன்றி சாதாரண நாட்களிலும் சுவாமி தரிசனம் செய்ய பலமணிநேரம் மட்டுமன்றி பல நாட்களும் ஆகிறது. இதனால் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் இ-தர்ஷன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2010) டிசம்பர் மாதம் விவேகானந்தா கேந்திராவில் இ-தர்ஷன் மையம் துவங்கப்பட்டது. இந்த இ.தர்ஷன் மூலம் வெங்கடேஷ்வர பகவானை தரிசனம் செய்யும் தேதி மற்றும் கிழமையை முன் கூட்டியே பதிவு செய்வதாகும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இ-டிக்கெட் மையத்தில் தரிசன முன்பதிவு செய்ய விரும்பும் யாத்ரிகர் நேரடியாக முன்பதிவு மையத்திற்கு வர வேண்டும். யாத்ரிகரது புகைப்படம் எடுக்கப்பட்டு அவரது கை ரேகை கம்பியூட்டர் மூலம் பதிவு செய்யப்படும். தரிசனத்திற்கு தேவையான பணத்தினை கட்டியபின் அதற்கான ரசீது வழங்கப்படும். தரிசனமுறை முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாளன்று இந்த ரசீதினை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும். அங்கே யாத்ரிகரது புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தேவையான தொகையினை பணம் அல்லது காசோலை, வரைவோலை ஆகியவற்றினை திருமலை திருப்பதி என்ற பெயருக்கு அடைக்கலாம். குழுவின் ஒவ்வொறு அங்கத்தினருக்கும் தனித்தனியே புகைப்படம் எடுக்கப்பட்டு கை விரல் ரேகையும் பதிவு செய்யப்படும். வழிபாட்டு விபரங்கள் அதிகாலை 2.30 மணிக்கு நடக்கும் சுப்ரபாத தரிசனம் நபர் ஒன்றுக்கு ரூ.120 கட்டணமும், காலை 5.30 மணிக்கு நடக்கும் நிஜபாத தரிசனம் (வெள்ளி) நபர் ஒன்றுக்கு ரூ.200ம், மதியம் 1 மணிக்கு நடக்கும் அர்ஜித பிரமோத்ஸவத்திற்கு 200 ரூபாய் கட்டணமும், மதியம் 1 மணிக்கு நடக்கும் ஊஞ்சல் வழிபாட்டிற்கு ரூ.200 கட்டணமும், பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் வசந்த உற்சவத்திற்கு ரூ.300 கட்டணமும், மாலை 5.30 மணிக்கு நடக்கும் சஹஸ்ர தீப அலங்கார வழிபாட்டிற்கு ரூ.200 கட்டணமும், இரவு 7.30 மணிக்கு நடக்கும் விஷேஷ பூஜை தினங்களுக்கு ரூ.600 கட்டணமும், 5.30 மணிக்கு நடக்கும் அஷ்டதாரி பாதிபத்ம ஆராதனைக்கு (செவ்வாய்) 1,250 ரூபாய் கட்டணமும், 11.30 மணிக்கு நடக்கும் கல்யாண உற்சவத்திற்கு ரூ.500 கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையம் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும். செவ்வாய்கிழமை விடுமுறையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவேகானந்தா கேந்திராவில் தொடங்கப்பட்ட இந்த இ-தர்ஷன் சேவை மையம் மூலம் தினமும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அறிமுப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதால் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Tuesday, November 29, 2011

soup song

yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri..di

distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila sax eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english..

hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song

நட்சத்திரம் - கிரகம் - மனிதன்

ஜோதிடம் வேத சாஸ்திரத்தின் ஓர் அங்கம்.
ஜோதிடத்தை கண்டு பிடித்தது இன்னார் என சுட்டிக்காட்ட முடியாது.
சாஸ்திரம் என்பது
முற்றிலும் கண்டறியபட்ட மெஞ்ஞானம் என பொருள் கொள்ளலாம். ஜோதிடம் என்பதும் சாஸ்திரம் எனும் தலைப்பிற்கு கீழ் வரும் ஓர் மெஞ்ஞானமாகும்.

தனிஒரு மனிதனால் கண்டுபிடிக்கபட்ட எந்த ஒரு சித்தாந்தமும் விஞ்ஞானம் என்றே அழைக்கப்படும். சாஸ்த்திரங்கள் எல்லாம் யார் கண்டுபிடித்தார் என கூறப்படாமல் இருக்கும், காரணம் அவை இறையருளால் மனித இனத்திற்கு தரப்பட்டது என்பதே உண்மை.

வராக மிஹிரர், பராசரர் மற்றும் ஜெயமினி என்ற முனிவர்கள் கண்டுபிடிக்கவில்லையா என கேட்கலாம். அவர்கள் தெய்வீகம் எனும் நதி வழிந்தோடும் பகுதியின் கரையாக இருந்தார்கள். அதாவது ஜோதிட சாஸ்திரம் உலகுக்கு கொடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கபட்ட கருவிகள். சில முட்டாள்கள் ஜோதிடத்தின் வரலாறை சொல்லும் பொழுது “ஆட்டு இடையர்கள் வானத்தை ஆராய நிறைய நேரம் கிடைத்தது அதனால் வானசாஸ்திரத்தை கண்டறிந்து முதலில் அவர்களுக்கு பிடித்த ஆட்டை ராசியின் வடிவமாக கொடுத்தார்கள்” என்கிறார்கள். சிறிது சிந்தித்து பாருங்கள் ஆட்டு இடையர்கள் கண்டறிந்தார்கள் என்றால் இன்றைய ஆட்டு இடையர்கள் ஏன் ஜோதிடர்களாக இல்லாமல் , புதிய கண்டுபிடிப்பு செய்யாமல் வெறும் ஆட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள்? விட்டால் ஏசு நாதர் ஆடு மேய்த்தார் அவர்தான் முதல் வானியல் நிபுணர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

ஜோதிடத்தின் வரலாற்றை பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாம் ஓய்வாக இருக்கும் சமயம் அதை பற்றி பேசுவோம். இப்பொழுது ஜோதிடம் பற்றி அடிப்படை விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.


கிரகங்களுக்கு உண்மையில் வேலை செய்யுமா?


உங்கள் நண்பர் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் என கொள்வோம். உடனடியாக அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி கோடீஸ்வரர் ஆக்க முடியுமா?

முடியாது...
அவரின் சாதாரண நிலையிலிருந்து கீழ் இறக்கி ஒன்றுக்கும் ஆகாதவராக பிச்சை எடுப்பவறாக மாற்ற முடியுமா?

அதுவும் முடியாது.

உணர்வு நிலையில் தொடர்பு கொண்ட, கண்களால் பார்த்து உணரக்கூடிய உங்கள் நண்பரை இது போல மாற்றம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பொழுது....

கண்களால் பார்க்க முடியாத.. உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட கிரகம் இதை எல்லாம் செய்கிறது என்கிறார்களே அது எப்படி?

சுக்கிரன் வந்தது கோடீஸ்வரன் ஆனார், சனி வந்தது காணாமல் போனார் என்கிறார்களே?

கிரகத்திற்கு உண்மையில் சுயமான சக்தி கிடையாது.


புரிகிறது ... வேறு ஏதோ இணைய தளத்திற்கு வந்துவிட்டோமா என முழிக்கிறீர்கள்.

கிரக சக்தி கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் ஜோதிடம் இல்லை, கிரக சக்தி இல்லை என சொல்ல முடியாது.

அலைபேசியை உதாரணமாக கொள்வோம். அலைபேசியில் அதன் அலைகள் கண்களுக்கு தெரிவதில்லை. நம்மை ஒருவர் அலைபேசியில் அழைத்தால் அது எந்த திக்கிலிருந்து வருகிறது என நம் கண்களில் தெரிவதில்லை. அதற்காக அலைபேசி என்பது பொய் என நாம் எண்ணுவதில்லை. அதுபோல தான் கிரக சக்தியும்.

கிரகத்திற்கு சக்தி கிடையாது என கூறினேன். ஆனால் சக்தியே கிடையாது என சொல்லவில்லை. கிரகம் தனித்து இயங்காது. ஆனால் நட்சத்திரம் எனும் மாபெரும் சக்தி அதன் பின்புலத்தில் வேலை செய்தால் தான் இயங்க முடியும்.





அலைபேசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்தால் நட்சத்திரம் - கிரகம் - மனிதன் எப்படி இயங்குகிது என புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


அலைபேசியில் ஒருவர் மற்றொருவருக்கு தொடர்பு கொள்கிறார் என்றால் முதலில் அந்த அலைகள் அருகில் இருக்கும் கோபுரத்திற்கு (TOWER) செல்லும் அங்கிருந்து அலைபேசி மாற்றிக்கு (Tele Exchange) செல்லும் பின்பு இதே செயல் நடந்து மற்ற அலைபேசிக்கு சென்றடையும்.

அது போலதான் நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் கிரகத்தினால் பிரதிபலிக்கப்பட்டு நமது தாய் கிரகமான பூமிக்கும் எதிரொளிக்கப்படுகிறது.

மனிதனும் மற்ற ஜீவராசிகளும் ஏன்.. அனைத்தும் இதனால் இயங்குகிறது.




எனவே நட்சத்திரம் இல்லாமல் கிரகங்களும், கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரமும் பூமிக்கு ஆற்றலை வழங்க முடியாது. இரண்டு விஷயங்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

இங்கு வானவியல் பற்றி பேசவேண்டும். வானவியல் (Astronamy) என்பது ஓர் விஞ்ஞான சித்தாந்தம். கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளி பற்றி ஆராயும் சித்தாந்தம்.

வானவியல் ஜோதிடத்தின் அடிப்படை என சொன்னாலும், முழுமையான வானவியல் நமக்கு பயன்படாது. கிரகங்களின் சுற்றுபாதை, சூரிய மண்டலத்தின் அமைப்பு இதுவெல்லாம் வானவியல் மூலம் நமக்கு கிடைக்குமே தவிர ஜோதிடத்தை பற்றி நாம் இங்கு பேசிய கிரக ஆற்றல் எனும் கருத்து வானவியலில் இல்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள வானவியல் கிரகங்கள் பார்ப்போம்.

1) சூரியன் 2) புதன் 3) சுக்கிரன் 4) பூமி 5) செவ்வாய் 6) குரு 7) சனி 8) யூரைனெஸ் 9 ) நெப்டியுன் 10) ப்ளூட்டோ

இதில் சூரியன் என்பது ஓர் நட்சத்திரம், மற்றவை அனைத்தும் கிரகம். இதில் ப்ளூட்டோ என்பது தற்சமயம் கிரகம் அல்ல என அறிவிக்கப்பட்டுவிட்டது.


ஜோதிட ரீதியான கிரகங்களை பார்ப்போம்.

1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் 4) புதன் 5) குரு 6) சுக்கிரன் 7)சனி 8) ராகு 9) கேது.

வானவியல் கிரகத்திலும் , ஜோதிட ரீதியான கிரகத்திலும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா?
ஜோதிட ரீதியான கிரகங்களில் பூமி என்பது இல்லை, ராகு கேது என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.




இதற்கு காரணம் என்ன?

வானவியல் என்பது விண்வெளி பொருட்களை கொண்டு ஆய்வு செய்யும் ஓர் அறிவியல், ஜோதிடம் என்பது விண்வெளியில் இருக்கும் ஆற்றல் மண்டலங்களை பற்றி ஆய்வு செய்யும் ஓர் மெய்ஞ்ஞானம்.

நட்சத்திர மண்டலங்கள் மூலம் வெளிப்படும் ஆற்றல் ஆனது பூமிக்கு எந்த பகுதியிலிருந்து பிரதிபலிக்கபடுகிறதோ அந்த பகுதியை கணக்கில் கொண்டு ஆய்வு செய்வது ஜோதிடம். பூமி நாம் இருக்கும் இடம் ஆகையால் இங்கு வந்தடையும் ஆற்றலை தான் நாம் கணக்கிடுவோம், மாறாக பூமியை இதில் இணைக்க முடியாது.

ராகு கேது என்பது என்ன?

விண்ணில் எந்த புள்ளியில் நட்சத்திர ஆற்றல் பிரதிபலிக்கப்படுகிறதோ அப்புள்ளி நமக்கு மிகவும் முக்கியமானது. பூமியின் வட்டபாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் இணையும் இடத்தில் விண்கற்களோ, விண் தூசுக்களோ இல்லாமல் வெற்றிடமாக வெறுமையாக இருக்கும். இந்த புள்ளியில் ஆற்றல் அதிக அளவில் கடத்தப்படும். ( வெற்றிடத்தில் ஆற்றல் பரவும் என்பது விஞ்ஞான தத்துவமும் கூட)

ராகு-கேது புள்ளிகளில் பூமியின் நிழல் படிவதால் அதை சாயா கிரகம் ( நிழல் கிரகம்) எனவும் அழைக்கிறார்கள்.




ஜோதிட ரீதியான கிரகங்கள் எனும் பட்டியலை பார்த்தீர்களா? அதன் வரிசையை ஞாபகம் வைக்க எளிய வழி உண்டு. ஞாயிறு முதல் சனி கிழமை வரை மனதில் வரிசையாக சொல்லி அத்துடன் ராகு / கேதுவை இணைத்து கொண்டால் போதுமானது.

உலகின் அனைத்து காலண்டரிலும் கிழமை ஒன்றாக இருப்பதன் காரணம் புரிகிறதா?

யந்திர சாஸ்திரம்

யந்திர சக்தி
- வரி வடிவில் ஆற்றல்.

முக்கோணம் :

சக்தியின் மூல வடிவம் முக்கோணம். பரம்பொருளின் வடிவம் வட்டம் என அறிந்துகொண்டோம். அப்பரம் பொருள் ரூபமாக மாற்றம் அடையும் பொழுது எடுத்துக்கொள்ளும் வடிவம் முக்கோணம். மூன்று தன்மையை உள் அடக்கியது முக்கோணம். அவை படைத்தல் - காத்தல் -அழித்தல். அறம் - பொருள் - இன்பம், ரஜோ - தமோ - சாத்வீக குணங்கள், இட -பிங்கள -சூஷ்ம நாடிகள் என அனைத்தும் பரம்பொருள் எடுத்துக்கொண்ட சக்தி வடிவங்களாகும். இடத்திற்கு ஏற்றதுபோல இந்த முக்குணங்கள் செயல்படும். முக்கோணங்களை மேல் நோக்கிய முக்கோணம், கீழ் நோக்கிய முக்கோணம் என இரு வகை படுத்தலாம்.





மேல் நோக்கிய முக்கோணம் ஆண் தன்மையானது. கீழ்நோக்கிய முக்கோணம் பெண் தன்மையானது.

இதை சிவ மற்றும் சக்தியின் வடிவம் என கூறலாம். இவை இரண்டும் இணைந்த வடிவம் ஒர் போல காணப்படும். இவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ சக்தி வடிவங்களாகும். இந்த இரு கோணம் இணைந்தவுடன் பல முக்கோண அமைப்புகள் அதன் உள்ளே தோன்றுவதை காணலாம்.





இணைந்த முக்கோணங்கள் ஆக்க சக்தியின் வடிவங்கள். இவ்வகை யந்திரம் தென்பகுதி இந்தியாவில் ஸுப்ரமண்ய கடவுளின் வடிவமாக வணங்கப்படுகிறது. இப்பொழுது 'சரவணபவ' என மூல மந்திரம் எழுதிய சரவண யந்திரம் உங்கள் நினைவில் நிழலாடும் என நினைக்கிறேன். ஸுப்ரமண்யர் கார்த்திகை நட்சத்திரப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் நட்சத்திர வடிவம் எடுத்தவர் என புராணம் சொல்லும் காரணம் யந்திர சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டது.

யந்திர விதிகள் சாதாரண கோடுகளுக்கும், சதுரத்திற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. முடிவு பெற்ற வடிவங்களை ஆன்மா உணர்வதில்லை. சதுரத்தில் உள்ள நான்கு கோணங்களும் ஆன்மாவின் தொடர்பை ஏற்றுக் கொள்வதில்லை. சதுரம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சதுரத்தின் பக்கங்களை திறந்த வடிவில் ஆற்றலை வெளிவிடுமாறு அமைக்கிறார்கள்.


வரிவடிவில் உள்ள வட்டமும் முக்கோணமும் என்ன தான் மாற்றத்தை ஏற்படுத்தும் ? உண்மையில் இவை குறிப்பது என்ன? என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.


ஓர் சக்தி கேந்திரத்தின் வடிவமே யந்திரங்கள். உதாரணமாக ஓர் மோட்டார் இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். பல இடங்களில் இந்த மோட்டார் பேருதவி செய்து வருகிறது. வாகன இயக்கம், நீர்ஏற்றம் மற்றும் விசைத்தறி என பல துறைகளில் வேகப்படுத்தவும் நேரத்தை குறைக்கவும் மின்சார மோட்டார் பயன்படுகிறது.




இத்தகைய மோட்டாரின் அமைப்பு சக்தியின் அடையாளம். பொறியியல் துறையில் இதை வடிவமைக்கும் பொழுது பல கோணங்களில் மோட்டாரின் அமைப்பை வரைந்து கொள்வார்கள். இரண்டாக பிளந்த [ section drawing ] முறையில் பார்த்தால் மின்சாரமோட்டார் யந்திரம் போல காட்சியளிக்கும்.


இதற்கு மேலும் ஓர் எளிய உதாரணம் கூறலாம். ஓர் ஆணியை எடுத்துக்கொள்ளுங்கள். நமது வாழ்வில் பல தருணங்களில் இது பயன்படுகிறது. ஒரு நீளமான ஆணியின் தலைப்பகுதி கீழே இருக்குமாறு வைத்து கீழ்பகுதியை உங்கள் கண்ணுக்கு நேராக வைத்துப் பாருங்கள். ஒரு வட்டத்தின் மையத்தில் நட்சத்திரம் இருப்பது போல தோன்றும். யந்திரத்தின் தத்துவமும் இதுவே. முப்பரிமாணமாக உள்ள விஷயத்தை வரி வடிவில் இரு பரிமாண பிம்பங்களால் நமது உள்நிலை முப்பரிமாணமாக அதை உணரும்.


ஸ்ரீ யந்திரம், சுதர்ஸ்ன யந்திரம் என பல சக்தி யந்திரங்கள் உண்டு. நவகிரக சக்திகளையும் யந்திர வடிவில் நிலைப்படுத்த முடியும். இந்த யந்திரங்கள் பார்க்கும்பொழுது சிக்கலான அமைப்பை கொண்டதாக தெரிந்தாலும், வரைவதற்கு எளிதானது. இந்தியாவில் பல கோவில்கள் ஸ்ரீ யந்திரத்தின் மைய அமைப்பை போன்று காணப்படும். உதாரணமாக திருமலை திருப்பதியில் மூலஸ்தான கோபுரம் ஸ்ரீமேரு எனும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தை போன்று கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் பல கோவில்கள் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக அமைந்துள்ளது. இந்த கோவில்களை கருட பார்வையில் [ Top view ] பார்த்தால் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக தெரியும்.


வரை படமாக வரைந்தால் மட்டும் யந்திரம் வேலை செய்யும் என நினைக்காதீர்கள். சக்தியூட்டுதல் எனும் செயல்மூலம் யந்திரம் ஆற்றல் பெறவேண்டும். மந்திர உச்சாடனம், பூஜா விதி மற்றும் ஆற்றல் நிலைபடுத்தும் விதி மூலம் யந்திரம் மாபெரும் பிரபஞ்ச சக்தியை பெற்று செயல்பட துவங்கும்.


யந்திரம் வரைந்து அதில் சக்தியை நிலைபடுத்துவது எல்லோராலும் முடியாது. இதை சிறந்த யந்திர சாஸ்திரம் கற்றவர்களே செய்ய முடியும். தற்சமயம் பலர் யந்திரம் என்ற பெயரில் சில கோடுகளை வரைந்து கொடுக்கிறார்கள். இதை வாங்கி உபயோகிப்பவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபத்தில் சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்கள். உண்மையில் யந்திரம் வரைவதும், பயன்படுத்துவதற்க்கும் பல நெறிமுறைகள் உண்டு.


யந்திரத்தை தாமிரம் போன்ற உலோகத்தில் வரைவது முக்கியம். மின்சாரம் கடத்தும் பொருட்களில் தாமிரம் முதல் இடத்தை பெறுகிறது. நமது ரிஷிகள் தாமிரத்தை யந்திர சாஸ்திரத்திற்கு பயன்படுத்திய காரணம் இதற்கு அற்றல் கடத்தும் திறன் அதிகமாக இருப்பதால் தான். மேலும் தங்கம் , தாமிரத்தை கட்டிலும் ஆற்றல் கடத்துவதில் சிறந்தது என்றாலும் பொருளாதார ரீதியில் பயன்படுத்த முடியாது. யந்திரம் வரையும் பொழுது சிறிது தவறு செய்தாலும் யந்திரம் முழுவதும் வீணாகிவிடும். தேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் அமைக்கும் யந்திரம் முழுமையான செயல்களை செய்யும்.


கோவில்களின் கருவறையில் மூல விக்ரஹம் அமைப்பதற்க்கு முன்னால் அதன் அடியில் யந்திரதை ஸ்தாபனம் செய்வார்கள். இந்த இறை சக்தியே விக்ரகம் மூலம் பக்தர்களை வந்தடைகிறது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யந்திரம் மீண்டும் மீண்டும் சக்தியூட்டம் பெறுகிறது.


யந்திரத்தை நாம் பயன்படுத்தும் பொழுது அவற்றை வெறும் படம் போல சட்டத்தில் தொங்கவிடுதல் கூடாது யந்திர அமைப்பை முழுமையாக தியானிக்க வேண்டும். எனது யோகப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யந்திர தியானம் கற்றுக்கொடுப்பதுண்டு. இவர்கள் யந்திரத்தை பயன்படுத்தும் விதம் தெளிவாக தெரிந்துகொள்வார்கள்.


இதை பயிற்சி பெற்றவர்கள் செயல், சிந்திக்கும் திறன் மற்றும் வாழ்வியல் நிலையில் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். யந்திர தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல, அனைத்தையும் பட்டியலிட முடியாது. யந்திர தியானம் ஏற்படுத்தும் மாற்றம் பட்டியலுக்கு அப்பாற்பட்டது. உடலில் உள்ள ப்ராண சக்திகளின் ஏற்றத்தாழ்வை பொறுத்து நமது சுக துக்கங்கள் அமைகிறது. கல்வி, பொருளாதார உயர்வு, திருமண வாழ்க்கை, உடல் நோய் என வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் சிறந்த நிலையில் அமைய யந்திரத்தை பயன்டுத்தலாம். வாழ்க்கை சம்பவத்தைக் காட்டிலும் ஆன்ம உணர்வுக்கும், ஞான முதிற்சிக்கும் யந்திரயோகம் எனும் தியான பயிற்சி மிகவும் உறுதுணையானது.

Monday, November 28, 2011

‘சூ…மந்திரக்காளி

எனது மாந்திரீக அனுபவம்!"> மாந்திரீக அனுபவம்!

suu..maindrakalii

ரண்டு மூன்று நாட்களாகவே மனதில் ஒருவித சோர்வு. பேப்பரில் வந்த ராசிபலனும் தைரியம் தரும் வகையில் அமையவில்லை. காலையில் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு ஆட்டோக்காரன் வேறு மோதப் பார்த்தான்.

அலுவலகத்திலோ, இன்னொருவர் செய்த தவறுக்கு எனக்கு பாட்டு.

‘என்ன வாழ்க்கை? ச்சீசீ! ‘ என்றது மனது.

மத்தியதர வாழ்க்கையில் இருந்து,மெல்ல முன்னேறுகிற ஒரு இளைஞன்தான் நான். திருமணம் ஆகிவிட்டது. சொந்த வீடும் கட்டிவிட்டேன். ‘பலரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள் ‘ என அடிக்கடி தோன்றும். இதனால் ஒரு பக்கம் கர்வமும், இன்னொரு பக்கம் மறைந்திருக்கும் கடன் சுமையும் தலையை அழுத்தும். உள்ளுக்குள் நிம்மதி குறைந்தது. வாழ்க்கையில் பயம், பதற்றம் அதிகரித்தது.

அதுமாதிரி சமயங்களில், இறை வழிபாடும்,ஜோதிட நம்பிக்கையும் என்னை கவலையில் இருந்து விடுபட வைக்கும் ஒரு போதை பொருளாக அமைந்தது.

நாளை சுகமாக இருப்போம் என நம்ப வைத்தது. எனவே சாஸ்திர சம்பிரதாய விஷயங்களிலும், முற்போக்குவாதிகள் அறிவிக்கும் மூடநம்பிக்கை விஷயங்களிலும்…இலைமறை காயாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

அன்றைய தினம், அப்படித்தான் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருந்தேன்.

‘‘கைரேகை பார்க்கலியோ… ஜாதகம் பார்க்கலியோ ” என சாலையில் கூவிக் கொண்டே வரும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தேன்.

கைலி, தையில் குல்லா, தோளில் ஒரு துணிப்பை சகிதம் ஒருவன் கூவிக்கொண்டு வருகிறான் என தெரிந்தது.

சட்டென என் மனதில்…‘ இவனிடம் குறிகேட்டால் என்ன? ’ தோனிற்று.

‘கூலி அதிகம் கேட்டுவிட்டால் ’ -அடுத்த கேள்வி எழுந்தது. ‘ கேட்டுப்பார்ப்போம், குறைவாக இருந்தால் கூப்பிடுவோம் ’ -முடிவு செய்தேன்.

அவனும், என் மனநிலை அறிந்தவன் போல்… என் வீடு வந்ததும், நின்று ‘‘கைரேகை பார்க்கிறீங்களா? ”என்றான்.

‘‘கைரேகைக்கு எவ்வளவு?” என்றேன்.

‘‘பதினோரூவா கொடு ” என்றான்.

‘அதிகமில்லை ’ என மனசு சொல்ல ‘‘உள்ளே வா ” என்றேன்.

வாசல்கேட்டை திறந்துகொண்டு, வீட்டுத் திண்ணையில் வந்த அமர்ந்தான்.

அம்மாவை மட்டும் வெளியில் அழைத்தேன். மனைவி ‘என்ன ’ என்று ஜாடை காட்டினாள். ‘‘நீ வராதே ” என்றேன் மெதுவாய்.

எங்களுக்கு தெலுங்கு தெரியுமென்பதால்… அம்மா கோபமாய் கிசுகிசுத்தாள். ‘‘நமக்குத்தான் குடும்ப ஜோதிடர் நெடுங்குடி பசுபதி இருக்காரே…இவன எல்லாம் ஏன் கூப்பிடுறே” என்பதுதான் அதன் பொருள்.

‘‘கூப்பிட்டுவிட்டேன். கூலி பதினோரூவாதான் ” என்று சாந்தப்படுத்திவிட்டு, அவன் எதிரெ அமர்ந்து கைநீட்ட தயாரானேன். அம்மாவும் பக்கத்தில் அமர்ந்தாள்.

எனது வலது கையின் நடுவிரலை பிடித்து…வெளிச்சம் படுமாறு கையை திருப்பியவன்…அழமாய் உற்று நோக்கினான். சில நொடிகளுக்குப் பிறகு, எனது முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு சொன்னான். ‘‘ உன் மீது விஷப்பார்வை விழுந்திருக்கு. பலருடைய திருஷ்டி பட்டிருக்கு. உன்னுடைய குலதெய்வம் இப்போ வீட்டுல இல்ல. அது வெளியேறி மூணு மாசம் ஆகுது. நீ பார்க்க வெள்ளையும், சொள்ளையுமாக தெரிந்தாலும்…கையில் லெட்சுமி இல்ல. எவ்வளவு வந்தாலும் பத்தாது.

இந்த ஆடி மாசத்துக்குள்ள… பெரிய இழப்பு ஒண்ணு, உனக்கு வர இருக்கு. உடம்புல ஒரு அங்கம் நிரந்திரமா ஊனமாக போகுது. நீ சீரழியணுமின்னு இரன்டு வருஷமா ஏவி விட்ட தீய சக்தி ஒண்ணு சுத்தி சுத்தி வருது. இதுவரைக்கும் உன் வீட்டுல இருந்த குல தெய்வம்தான், உன்னை காவந்து செஞ்சிச்சிது.

இப்ப அந்த தெய்வமும் வெளியில போயிட்டுது. அத உள்ளே விடாம தடை பண்ணியிருக்கு…” -வந்தவன் சொல்லிக்கொண்டே போக ,எனக்கு இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது.

ஒருபக்கம் மரண பயம் வந்து கவ்விக் கொள்ள…இவன் மந்திரவாதியாக இருந்துவிட்டால், இவனிடம் சிக்கிவிடக்கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வு இன்னொரு பக்கம் ஏற்பட்டது.

மந்திரவாதிகள்…இப்படி பயமுறுத்தி நிறைய பணம், நகை என பிடுங்கி விடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கேன்.சுதாரித்துக்கொண்டு சொன்னேன்.

‘‘நல்ல நேரத்துல வந்து சொன்னீங்க. இந்த ஆபத்துலேர்ந்து தப்பிக்க, என்ன பரிகாரமுன்னு எங்க ஆஸ்தான ஜோதிடர் கிட்ட கேட்டு செஞ்சிக்கிறேன். நன்றி, நீங்க வாங்க ‘‘ என்று சொல்லிவிட்டு, அம்மாவிடம் ‘‘ பதினோரூவா எடுத்துவா ”

அவன் ‘‘எதுக்கு ” என்றான்.

குழப்பமாய், ‘‘உன்னுடைய தட்சணை ‘‘ என்றேன்.

‘‘அந்தக் காசை நான் வாங்கமாட்டேன். நான் வாங்கக்கூடாது. மரண வாக்கு கொடுத்துவிட்டு, அந்தக் காசை வாங்கினால், நான் என்னாவது? எனக்கு வேண்டாம். எங்காவது கோயில் உண்டியலில் போட்டுவிடு. ”-பையை தோளில் மாட்டியபடி புறப்பட்டான். நானும், அம்மாவும் விக்கித்து நின்றோம்.


White_Magicகாலையில் ஆட்டோ மோத வந்த சம்பவம் ஒரு கணம் நினைவில் வந்து போனது. இவன் சொல்வதுபோல், மரணத்தை நோக்கி ஏதேனும் தீயசக்தி, என்னை விரட்டுகிறதா? பிடி வதாமாக தட்சணைகூட வாங்காமல் புறப்படுகிறானே…‘ தடுமாறினேன்.

‘இதிலிருந்து உடனே தப்பித்துவிட வேண்டும் ‘ -மரண பயத்தில் வாசல் கேட்வரை சென்ற அவனை மறுபடியும் அழைத்தேன்.

இந்தமுறை, எனது அழைப்பில் அவனிடம் ‘உயிர் பிச்சை ‘ கேட்கும் தொனி வெளிப்பட்டது.

அலட்சியமாக திரும்பி என்னைப் பார்த்தவன்…
‘‘பார்க்க நல்லவனாக தெரியிற. உன்னை இப்படியே விட்டுவிட எனக்கும் மனசு இல்ல. இதிலிருந்து தப்பிக்க வழியிருக்கான்னு ஆண்டவன வேண்டி கேட்டுப் பார்க்கிறேன், இரு…” என்றவன், பழையபடி வந்து அமர்ந்தான்.

இப்போது அவனைப் பார்க்க ஒரு சாதாரண ஜோதிடனாக எனக்குத் தெரியாமல்…மரணத்தில் இருந்து என்னை விடுவிக்க இருக்கும் மகானாக தெரிந்தான். கைகட்டி பவ்வியம் காட்டினேன்.

குனிந்து தரையை ஊதி, சுத்தப்படுத்தினான். பையில் இருந்து ஒரு டைரியை எடுத்தான். அதில் திராவிட கட்சியைச் சேர்ந்த பலகுட்டி அரசியல்வாதிகளின் விசிட்டிங் கார்டுகள் இருந்தன.

‘‘ இவர்கள் எல்லாம் என்னிடம் குறி கேட்டவர்கள்.
இன்றைக்கு பெரிய மனுஷங்க… புரியுதா. பயப்படாதே. கைகட்டாதே. கையை எடு ‘‘ என்றான். தலையாட்டினேன்.

‘‘உள்ளே போயி மூணு ஊதுபத்தி எடுத்துவா ‘‘ என்றான்.

வீட்டிற்குள் நுழைந்தேன்.

கதவுக்கு பின்னால் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த மனைவி, கலவரத்துடன் ‘‘என்ன ” என்றாள்.

என்னை மீறி என்னமோ நடக்குது. நீ வேளியே வந்துவிடாதே ” என்றேன். கர்ப்பவதியாக இருக்கும் அவள், இதெல்லாம் பார்க்க வேண்டாமே என்கிர பதற்றத்தில் அப்படிச் சொன்னேன்.

ஊதுபத்தி எடுத்துச் சென்றதும் பணிவாகச் சொன்னேன். ‘‘என்னிடம் தற்சமயம் தங்களுக்கு கொடுக்க அதிக பணமில்லை..”

பட்டென்றூ கோபமாகப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ கொடுக்கிற பணத்துல நான் என்ன கோடீஸ்வரனாக ஆகிவிடப் போறேனா… பணம் பணமுன்னு சொல்லாதே. உயிர் போனா வருமா? முதல்ல உனக்கு வர ஆபத்த தடுக்க முடியுமான்னு பார்ப்போம் ” என்றான்.

‘‘ஒரு குவளை தண்ணீரும், ஒரு வெள்ளை பேப்பரும் எடுத்துவா ” என்றான்.

கொடுத்தேன். ‘‘ரோட்டில் இருந்து இடதுகையால்… விரல் அளவுக்கு கொஞ்சம் மண் எடுத்துக்கொடு ” என்றான். அதையும் கொடுத்தேன்.

பேப்பரில் அந்த மண்ணை வைத்து, அதனுடன் ஊதுபத்தியில் கறுப்புநிரத்தில் இருக்கும் எரியும் பொருளை மட்டும் சுரண்டி எடுத்து, அதை மண்ணோடு கலந்து பொட்டலாமாக மடித்தான்.

‘‘அந்த பொட்டலத்தை வீட்டின் ஈசானி மூலையில் வைத்து , ஓன்பது முறை தொட்டு கும்பிட்டு எடுத்துவா ” என்றான்.

இப்படிச் சின்னச் சின்ன வேலைகள் சொன்னான். கிட்டதட்ட அவன் சொல்வதெல்லாம் கேட்கும்நிலையில்… கொஞ்சம் கொஞ்சமாக என் முழு சுயகட்டுப்பாட்டு உணர்வையும் இழந்து போனேன்.

அவன் எதிரே அமரச் சொல்லி… கையில் ஒரு தர்கா படத்தை தந்தான். அருகில் இருந்த என் அம்மாவின் கையிலும் அதேபோல் ஒரு படம். ‘பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும்’ என்றான்.

அரபியில் ஏதோ சொன்னான். தஸ், உஸ் என்று தலையை ஆட்டினான்.

‘‘இவன் மீது ஏவியிருக்கும் தீயசக்தியை விரட்டிவிடலாமா? ”
தரையில் இருக்கும் பொட்டலத்தை பார்த்துக் கேட்டான்.

‘‘முடியுமென்றால் நீ உயிர்பெற்று சுத்து ” என்றான்.
சொல்லி முடித்ததும் பொட்டலம் மெதுவாக சுத்தியது. மண் பொட்டலம் சுத்துகிறதே என்கிற வியப்பு… நம்மீது படிந்துள்ள தீயசக்தியை எடுத்துவிடலாம்.. என்கிற மகிழ்ச்சி இரண்டும் கலந்து என் முகத்தை மாற்றியது.
Black_Magic

இப்போது மந்திரவாதி நிதானமாக சொல்கிறான்…

‘‘உன்னை விட்டு தீயசக்தியை விரட்ட வேண்டுமெனில்… அதை உன் மீது ஏவி விட்டவர்கள் என்ன செலவு செய்தார்களோ, அதி பாதி நீ கொடுத்து விட வேண்டும்.’’ என்றான்.

‘‘ அதிகமாக பணம் கேட்டுவிடாதே. இப்போது என்னால் முடியாது’’-பதறுகிறேன்.

‘‘சூ…பணம், பணம்… பேச்சை நிறுத்து. தூ…தூ…தூ…என்று மூணு வாட்டி சொல்லு’’ என்கிறான்.

“தூ…தூ…தூ…” சொல்கிறேன்.

மீண்டும் அரேபில் ஏதோ ஓதுகிறான். கையில் இருக்கும் சிறிய மந்திரகோலை பொட்டலத்திடம் நீட்டி,அப்பொட்டலத்தைப் பார்த்து கேட்கிறான். ‘‘எதிரி கொடுத்த ரூபாய் எவ்வளவு, ஜயாயிரமா?’’ பொட்டலம் அமைதி காக்கிறது.

அடுத்து கேட்கிறான்…‘‘மூவாயிராமா?’’ பொட்டலத்திடம் பதில் இல்லை. ‘‘ஆயிரத்தி ஜநூறா?’’ பொட்டலம் லேசாக அசைகிறது. அசைந்து, சுத்துகிற‌து.

இப்போது என்னைப் பார்த்து சொல்கிறான்…‘‘எதிரி ஆயிரத்தி ஜநூறு கொடுத்து, உனக்கு செய்வினை செஞ்சிருக்கான். ஒரு செயலுக்கு ஜநூறூ ரூவா வீதம்… மூணு செயலுக்கு ஆயிரத்தி ஜநூறு கொடுத்திருக்கான்.’’

‘‘அந்த எதிரி யாருங்க’’

அம்மா கேட்க…‘‘உன் கணவர் வழி சொந்தம்’’ என்கிறான். கணவர் வழி என்றதும், அம்மாவுக்கு திருப்தி.

‘‘என்ன காரணத்துக்காக செஞ்சிருக்காங்க’’

‘‘பொறாமை… உன் குடும்பம் முன்னேறுகிறதே என்கிற‌ பொறாமை’’

நாங்க, யாருக்கும் எந்த பாவமும் செய்யலியே…எங்களுக்கா இப்படி’’ அம்மா உணர்விழந்து சொல்கிறார்.

‘‘ச்சூ! கண்களை உருட்டி அம்மாவை அதட்டுகிறான். அம்மா மவுனமாகிறார்.

தனது தோள் பையில் இருந்து சின்னதாக ஒரு துணிமூட்டையை எடுத்து, என் முன்னே வைக்கிறான்.

‘‘கட்டெல்லாம் அவுரணும்னு சொல்லி, இந்தகட்ட அவுரு’’ என்றான்.

அவன் சொன்னது போலவே சொல்லி,அந்த துணி மூட்டையின் முடிச்சை அவிழ்க்கிறேன்.எனக்கு உடம்பெல்லாம் தூக்கி வாரி போடுகிறது. அதைப் பார்த்த என் தாயாரோ அலறிவிட்டார்.

அப்போது என் முகத்திலும் அம்மா முகத்திலும் ‘‘பச்’’ என தெளிக்கப்பட்ட தண்ணீர் துளிகளின் குளிர்ச்சி இறங்குகிறது.

அவன் தான் சொம்புத் தண்ணீரை எடுத்து எங்கள் முகத்தில் அடித்திருக்கிறான். கூடவே ‘‘போச்சு சொல்லு, கெட்டதெல்லாம் போச்சு சொல்லு’’ அவன் மூன்று முறை கூற,கிளிப்பிள்ளையாய் திரும்ப நானும் மூன்று முறை கூறுகிறேன்.

என்னிடமிருந்து என்னோவோ, போய்விட்டது போல்… உணர்வு ஏற்படுகிற‌து. கண்கள் மட்டும் பிரிந்து கிடக்கும் துணி மூட்டையிலேயே இருக்கிறது.

எதனாலோ செய்யப்பட்ட ஒரு மனித உருவத்தின், உடல் முழுவதும் கருகருப்பாய் மனித ரோமங்கள். வாய் பகுதியில் அசல் மனித‌ பற்கள்… பார்க்க கோராமாய்…ஒரு மரக்கட்டையில், அந்த உருவத்தை வைத்து அதன் வயிற்றுப்பகுதியில் பதினைந்துக்கு மேற்ப்பட்ட இரும்பு ஆணிகள் அரையப்பட்ட கொடூரம்… காலில் சின்னதாக…அசைவில் சத்தம் தரக்கூடிய மணி கட்டப்பட்டிருக்கிறது.

‘‘ம்ம்…சாத்தான் மீது எழுனூற்றி ஜம்பது ரூபாய் பணம் வை. ஆயிரத்தி ஜநூறில் பாதி’’ அதட்டல் கேட்டு நிமிருகிறேன்.

சீக்கிரம்’’ அவசரப்படுத்துகிறான்.

தற்சமயம் அவ்வளவு ரூபா இல்லையே’’ இழுக்கிறேன்.

‘‘அதெல்லாம் தெரியாது…பக்கத்தில் யாரிடமாவது பணம் வாங்கி வந்து வை. சீக்கிரம்’’ எழுந்து எதிர்வீடு நோக்கி ஓடுகிறேன். ‘‘அவசரம்,எழுநூற்றி ஜம்பது பணம் கொடுங்க, சயந்திரம் தரேன்’’ கடன் வாங்கி வந்து அவனிடம் நீட்டினேன்.

‘‘என்னிடம் நீட்டாதே…சாத்தானிடம் கொடு’’

பணத்தை அந்த பொம்மை மீது வைத்தேன். ‘இனி தாமதிக்க கூடாது. இவன் உடனே இடத்தை காலி செய்துவிட்டால் நல்லது’ என மனம் அலறுகிறது. புறப்படுகிற நேரத்தில், தீடீரென அந்த பொம்மையோடு ஏதோ அரபியில் பேசுகிறான்.கோபம் காட்டுகிறான்.

நிமிர்ந்து பார்த்துச் சொல்கிறான் ‘‘சாத்தான் பிடிவாதம் பிடிக்கிறான். நான் வரமாட்டேன், இங்கேயே இருக்கிறேன் என்கிறான்’’ என்று சொல்ல, நாங்கள் கலவரம் அடைகிறோம்.

மீண்டும் ஏதோ பேசுகிறான்…‘‘ஏய் ஆசைக்கார சாத்தானே, சும்மாயிரு’’ அதட்டுகிறான். பதற்றமாய், என்னைப் பார்த்து சொல்கிறான், ’’நீ அணிந்திருக்கிற தங்க ஆபரண‌ங்களில் ஏதாவது ஓன்று வேண்டுமாம் வாங்கித் தந்தால் வருகிறானாம்’’

அவனது வார்ததைகளை, கேட்ட அம்மா, தன்னையும் அறியாமல்..தனது தாலிச் செயினை பிடித்துக் கொள்கிறார்.

அவனது கண்களோ… என் கைவிரலில் இருக்கும் அரை பவுன் மோதிரத்தை உற்று நோக்கிறது.

வேறு வழியில்லாமல்.. என் கைவிரல் மோதிரம், சில நொடிகளில்…அந்த பொம்மை மீது விழுகிறது.

வேகவேகமாக மோதிரத்தையும் சாத்தானையும் மூட்டைகட்டி விட்டு கூறுகிறான்…‘‘உன்னை சுத்தி வந்த தீயசக்தி..விரட்டப்பட்ட விபரமும், அதை விரட்டிய விதமும் யாருக்கும் தெரியக்கூடது. புரியுதா! தலையாட்டுகிறேன். அந்த மண் பொட்டலத்தை கையில் தந்து விட்டு சொன்னான்…‘‘இதை மூன்று நாளைக்கு உன் தலை மாட்டில் வைத்து படுத்து விட்டு, நான்காம் நாள் ஆற்றில் வீசி ஏறி’’

அவனை அனுப்பி கதவை சாத்திவிட்டு,உள்ளே வந்த நாங்கள்… ஒருவருக்கு ஒருவர் புதிதாக பார்த்துக் கொண்டோம்.

‘‘கர்மம், அப்படியே போய் தலை முழுகுங்கள்’’ என்றாள் என் மனைவி. குளித்துவிட்டு வரும்போது.. வெளியில் சென்றிருந்த என் வயதான தந்தையார் வீட்டிற்குள் நுழைந்தார்.

அவரிடம் என் தாயார் கேட்டார்…‘‘உங்க குடும்ப வழியில, நமக்கு எதிரா செய்வினை செய்யக் கூடியவங்க யாரவது இருக்காங்காளா?’’

குடும்பத்தில், புதிய குழப்பமொன்று உருவாக துவங்கியிருப்பதை உணர்ந்தேன். தொலைபேசியில், அலுவலகத்துக்கு அரை நாள் லீவு சொன்னேன். பணம், மோதிரம் இழந்த மனது.. உள்ளுக்குள் ஆறுதல் தேடி அலைந்தது.

ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியரும், எங்கள் குடும்ப நண்பருமான தியாகராஜனின் நினைவு வந்தது.

குடும்பத்தில் எற்பட்ட பல்வேறு சோதனை காலத்திலும்… தொள் கொடுத்தவர் அவர்…அவரை சந்திக்க தூண்டியது மனது. அவரோ, இதில் எல்லாம் ந‌ம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும் அவரையே சந்திப்பது என் முடிவு எடுத்தேன்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட பேராசிரியார்..‘‘அந்த மண் பொட்டலம் எங்கே ’’ என்றார்.வீட்டில் இருக்கு என்றேன்.எடுத்து வரச் சொன்னார். உடனே அவரிடம், அதைச் சேர்த்தேன்.

அவரது ஆராய்ச்சி மேஜை மீது, அந்த பொட்டலம் பிரிக்கப்பட்டது. அந்த மண்ணை ஒரு விரலால் தடவிப்பார்த்துவிட்டு அருகில் இருந்த இரும்பு காந்த கட்டி ஒன்றை எடுத்து நீட்டினார். உடனே..மண், ஊதுவத்தி துகள்களுக்கு மத்தியில் இருந்து சில இரும்பு துகள்களும் காந்தத்தை நோக்கி புறப்பட்டன.

‘‘இந்த இரும்பு துகள்கள்தான், அந்த பொட்டலம் சுற்றியதற்கான சூட்சமம், மந்திரகோலின் நுனியில் தான் காந்தம் ’’ என்று சொல்லி சிரித்தார் பேராசிரியர்.

இக்கட்டுரை ‘சூ…மந்திரக்காளி ‘ என்ற பெயரில்
நக்கீரன் (7-9-1999) இதழில் வெளியானது.

‘சூ…மந்திரக்காளி

மாந்திரீக அனுபவம்!

suu..maindrakalii

ரண்டு மூன்று நாட்களாகவே மனதில் ஒருவித சோர்வு. பேப்பரில் வந்த ராசிபலனும் தைரியம் தரும் வகையில் அமையவில்லை. காலையில் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு ஆட்டோக்காரன் வேறு மோதப் பார்த்தான்.

அலுவலகத்திலோ, இன்னொருவர் செய்த தவறுக்கு எனக்கு பாட்டு.

‘என்ன வாழ்க்கை? ச்சீசீ! ‘ என்றது மனது.

மத்தியதர வாழ்க்கையில் இருந்து,மெல்ல முன்னேறுகிற ஒரு இளைஞன்தான் நான். திருமணம் ஆகிவிட்டது. சொந்த வீடும் கட்டிவிட்டேன். ‘பலரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள் ‘ என அடிக்கடி தோன்றும். இதனால் ஒரு பக்கம் கர்வமும், இன்னொரு பக்கம் மறைந்திருக்கும் கடன் சுமையும் தலையை அழுத்தும். உள்ளுக்குள் நிம்மதி குறைந்தது. வாழ்க்கையில் பயம், பதற்றம் அதிகரித்தது.

அதுமாதிரி சமயங்களில், இறை வழிபாடும்,ஜோதிட நம்பிக்கையும் என்னை கவலையில் இருந்து விடுபட வைக்கும் ஒரு போதை பொருளாக அமைந்தது.

நாளை சுகமாக இருப்போம் என நம்ப வைத்தது. எனவே சாஸ்திர சம்பிரதாய விஷயங்களிலும், முற்போக்குவாதிகள் அறிவிக்கும் மூடநம்பிக்கை விஷயங்களிலும்…இலைமறை காயாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

அன்றைய தினம், அப்படித்தான் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருந்தேன்.

‘‘கைரேகை பார்க்கலியோ… ஜாதகம் பார்க்கலியோ ” என சாலையில் கூவிக் கொண்டே வரும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தேன்.

கைலி, தையில் குல்லா, தோளில் ஒரு துணிப்பை சகிதம் ஒருவன் கூவிக்கொண்டு வருகிறான் என தெரிந்தது.

சட்டென என் மனதில்…‘ இவனிடம் குறிகேட்டால் என்ன? ’ தோனிற்று.

‘கூலி அதிகம் கேட்டுவிட்டால் ’ -அடுத்த கேள்வி எழுந்தது. ‘ கேட்டுப்பார்ப்போம், குறைவாக இருந்தால் கூப்பிடுவோம் ’ -முடிவு செய்தேன்.

அவனும், என் மனநிலை அறிந்தவன் போல்… என் வீடு வந்ததும், நின்று ‘‘கைரேகை பார்க்கிறீங்களா? ”என்றான்.

‘‘கைரேகைக்கு எவ்வளவு?” என்றேன்.

‘‘பதினோரூவா கொடு ” என்றான்.

‘அதிகமில்லை ’ என மனசு சொல்ல ‘‘உள்ளே வா ” என்றேன்.

வாசல்கேட்டை திறந்துகொண்டு, வீட்டுத் திண்ணையில் வந்த அமர்ந்தான்.

அம்மாவை மட்டும் வெளியில் அழைத்தேன். மனைவி ‘என்ன ’ என்று ஜாடை காட்டினாள். ‘‘நீ வராதே ” என்றேன் மெதுவாய்.

எங்களுக்கு தெலுங்கு தெரியுமென்பதால்… அம்மா கோபமாய் கிசுகிசுத்தாள். ‘‘நமக்குத்தான் குடும்ப ஜோதிடர் நெடுங்குடி பசுபதி இருக்காரே…இவன எல்லாம் ஏன் கூப்பிடுறே” என்பதுதான் அதன் பொருள்.

‘‘கூப்பிட்டுவிட்டேன். கூலி பதினோரூவாதான் ” என்று சாந்தப்படுத்திவிட்டு, அவன் எதிரெ அமர்ந்து கைநீட்ட தயாரானேன். அம்மாவும் பக்கத்தில் அமர்ந்தாள்.

எனது வலது கையின் நடுவிரலை பிடித்து…வெளிச்சம் படுமாறு கையை திருப்பியவன்…அழமாய் உற்று நோக்கினான். சில நொடிகளுக்குப் பிறகு, எனது முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு சொன்னான். ‘‘ உன் மீது விஷப்பார்வை விழுந்திருக்கு. பலருடைய திருஷ்டி பட்டிருக்கு. உன்னுடைய குலதெய்வம் இப்போ வீட்டுல இல்ல. அது வெளியேறி மூணு மாசம் ஆகுது. நீ பார்க்க வெள்ளையும், சொள்ளையுமாக தெரிந்தாலும்…கையில் லெட்சுமி இல்ல. எவ்வளவு வந்தாலும் பத்தாது.

இந்த ஆடி மாசத்துக்குள்ள… பெரிய இழப்பு ஒண்ணு, உனக்கு வர இருக்கு. உடம்புல ஒரு அங்கம் நிரந்திரமா ஊனமாக போகுது. நீ சீரழியணுமின்னு இரன்டு வருஷமா ஏவி விட்ட தீய சக்தி ஒண்ணு சுத்தி சுத்தி வருது. இதுவரைக்கும் உன் வீட்டுல இருந்த குல தெய்வம்தான், உன்னை காவந்து செஞ்சிச்சிது.

இப்ப அந்த தெய்வமும் வெளியில போயிட்டுது. அத உள்ளே விடாம தடை பண்ணியிருக்கு…” -வந்தவன் சொல்லிக்கொண்டே போக ,எனக்கு இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது.

ஒருபக்கம் மரண பயம் வந்து கவ்விக் கொள்ள…இவன் மந்திரவாதியாக இருந்துவிட்டால், இவனிடம் சிக்கிவிடக்கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வு இன்னொரு பக்கம் ஏற்பட்டது.

மந்திரவாதிகள்…இப்படி பயமுறுத்தி நிறைய பணம், நகை என பிடுங்கி விடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கேன்.சுதாரித்துக்கொண்டு சொன்னேன்.

‘‘நல்ல நேரத்துல வந்து சொன்னீங்க. இந்த ஆபத்துலேர்ந்து தப்பிக்க, என்ன பரிகாரமுன்னு எங்க ஆஸ்தான ஜோதிடர் கிட்ட கேட்டு செஞ்சிக்கிறேன். நன்றி, நீங்க வாங்க ‘‘ என்று சொல்லிவிட்டு, அம்மாவிடம் ‘‘ பதினோரூவா எடுத்துவா ”

அவன் ‘‘எதுக்கு ” என்றான்.

குழப்பமாய், ‘‘உன்னுடைய தட்சணை ‘‘ என்றேன்.

‘‘அந்தக் காசை நான் வாங்கமாட்டேன். நான் வாங்கக்கூடாது. மரண வாக்கு கொடுத்துவிட்டு, அந்தக் காசை வாங்கினால், நான் என்னாவது? எனக்கு வேண்டாம். எங்காவது கோயில் உண்டியலில் போட்டுவிடு. ”-பையை தோளில் மாட்டியபடி புறப்பட்டான். நானும், அம்மாவும் விக்கித்து நின்றோம்.


White_Magicகாலையில் ஆட்டோ மோத வந்த சம்பவம் ஒரு கணம் நினைவில் வந்து போனது. இவன் சொல்வதுபோல், மரணத்தை நோக்கி ஏதேனும் தீயசக்தி, என்னை விரட்டுகிறதா? பிடி வதாமாக தட்சணைகூட வாங்காமல் புறப்படுகிறானே…‘ தடுமாறினேன்.

‘இதிலிருந்து உடனே தப்பித்துவிட வேண்டும் ‘ -மரண பயத்தில் வாசல் கேட்வரை சென்ற அவனை மறுபடியும் அழைத்தேன்.

இந்தமுறை, எனது அழைப்பில் அவனிடம் ‘உயிர் பிச்சை ‘ கேட்கும் தொனி வெளிப்பட்டது.

அலட்சியமாக திரும்பி என்னைப் பார்த்தவன்…
‘‘பார்க்க நல்லவனாக தெரியிற. உன்னை இப்படியே விட்டுவிட எனக்கும் மனசு இல்ல. இதிலிருந்து தப்பிக்க வழியிருக்கான்னு ஆண்டவன வேண்டி கேட்டுப் பார்க்கிறேன், இரு…” என்றவன், பழையபடி வந்து அமர்ந்தான்.

இப்போது அவனைப் பார்க்க ஒரு சாதாரண ஜோதிடனாக எனக்குத் தெரியாமல்…மரணத்தில் இருந்து என்னை விடுவிக்க இருக்கும் மகானாக தெரிந்தான். கைகட்டி பவ்வியம் காட்டினேன்.

குனிந்து தரையை ஊதி, சுத்தப்படுத்தினான். பையில் இருந்து ஒரு டைரியை எடுத்தான். அதில் திராவிட கட்சியைச் சேர்ந்த பலகுட்டி அரசியல்வாதிகளின் விசிட்டிங் கார்டுகள் இருந்தன.

‘‘ இவர்கள் எல்லாம் என்னிடம் குறி கேட்டவர்கள்.
இன்றைக்கு பெரிய மனுஷங்க… புரியுதா. பயப்படாதே. கைகட்டாதே. கையை எடு ‘‘ என்றான். தலையாட்டினேன்.

‘‘உள்ளே போயி மூணு ஊதுபத்தி எடுத்துவா ‘‘ என்றான்.

வீட்டிற்குள் நுழைந்தேன்.

கதவுக்கு பின்னால் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த மனைவி, கலவரத்துடன் ‘‘என்ன ” என்றாள்.

என்னை மீறி என்னமோ நடக்குது. நீ வேளியே வந்துவிடாதே ” என்றேன். கர்ப்பவதியாக இருக்கும் அவள், இதெல்லாம் பார்க்க வேண்டாமே என்கிர பதற்றத்தில் அப்படிச் சொன்னேன்.

ஊதுபத்தி எடுத்துச் சென்றதும் பணிவாகச் சொன்னேன். ‘‘என்னிடம் தற்சமயம் தங்களுக்கு கொடுக்க அதிக பணமில்லை..”

பட்டென்றூ கோபமாகப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ கொடுக்கிற பணத்துல நான் என்ன கோடீஸ்வரனாக ஆகிவிடப் போறேனா… பணம் பணமுன்னு சொல்லாதே. உயிர் போனா வருமா? முதல்ல உனக்கு வர ஆபத்த தடுக்க முடியுமான்னு பார்ப்போம் ” என்றான்.

‘‘ஒரு குவளை தண்ணீரும், ஒரு வெள்ளை பேப்பரும் எடுத்துவா ” என்றான்.

கொடுத்தேன். ‘‘ரோட்டில் இருந்து இடதுகையால்… விரல் அளவுக்கு கொஞ்சம் மண் எடுத்துக்கொடு ” என்றான். அதையும் கொடுத்தேன்.

பேப்பரில் அந்த மண்ணை வைத்து, அதனுடன் ஊதுபத்தியில் கறுப்புநிரத்தில் இருக்கும் எரியும் பொருளை மட்டும் சுரண்டி எடுத்து, அதை மண்ணோடு கலந்து பொட்டலாமாக மடித்தான்.

‘‘அந்த பொட்டலத்தை வீட்டின் ஈசானி மூலையில் வைத்து , ஓன்பது முறை தொட்டு கும்பிட்டு எடுத்துவா ” என்றான்.

இப்படிச் சின்னச் சின்ன வேலைகள் சொன்னான். கிட்டதட்ட அவன் சொல்வதெல்லாம் கேட்கும்நிலையில்… கொஞ்சம் கொஞ்சமாக என் முழு சுயகட்டுப்பாட்டு உணர்வையும் இழந்து போனேன்.

அவன் எதிரே அமரச் சொல்லி… கையில் ஒரு தர்கா படத்தை தந்தான். அருகில் இருந்த என் அம்மாவின் கையிலும் அதேபோல் ஒரு படம். ‘பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும்’ என்றான்.

அரபியில் ஏதோ சொன்னான். தஸ், உஸ் என்று தலையை ஆட்டினான்.

‘‘இவன் மீது ஏவியிருக்கும் தீயசக்தியை விரட்டிவிடலாமா? ”
தரையில் இருக்கும் பொட்டலத்தை பார்த்துக் கேட்டான்.

‘‘முடியுமென்றால் நீ உயிர்பெற்று சுத்து ” என்றான்.
சொல்லி முடித்ததும் பொட்டலம் மெதுவாக சுத்தியது. மண் பொட்டலம் சுத்துகிறதே என்கிற வியப்பு… நம்மீது படிந்துள்ள தீயசக்தியை எடுத்துவிடலாம்.. என்கிற மகிழ்ச்சி இரண்டும் கலந்து என் முகத்தை மாற்றியது.
Black_Magic

இப்போது மந்திரவாதி நிதானமாக சொல்கிறான்…

‘‘உன்னை விட்டு தீயசக்தியை விரட்ட வேண்டுமெனில்… அதை உன் மீது ஏவி விட்டவர்கள் என்ன செலவு செய்தார்களோ, அதி பாதி நீ கொடுத்து விட வேண்டும்.’’ என்றான்.

‘‘ அதிகமாக பணம் கேட்டுவிடாதே. இப்போது என்னால் முடியாது’’-பதறுகிறேன்.

‘‘சூ…பணம், பணம்… பேச்சை நிறுத்து. தூ…தூ…தூ…என்று மூணு வாட்டி சொல்லு’’ என்கிறான்.

“தூ…தூ…தூ…” சொல்கிறேன்.

மீண்டும் அரேபில் ஏதோ ஓதுகிறான். கையில் இருக்கும் சிறிய மந்திரகோலை பொட்டலத்திடம் நீட்டி,அப்பொட்டலத்தைப் பார்த்து கேட்கிறான். ‘‘எதிரி கொடுத்த ரூபாய் எவ்வளவு, ஜயாயிரமா?’’ பொட்டலம் அமைதி காக்கிறது.

அடுத்து கேட்கிறான்…‘‘மூவாயிராமா?’’ பொட்டலத்திடம் பதில் இல்லை. ‘‘ஆயிரத்தி ஜநூறா?’’ பொட்டலம் லேசாக அசைகிறது. அசைந்து, சுத்துகிற‌து.

இப்போது என்னைப் பார்த்து சொல்கிறான்…‘‘எதிரி ஆயிரத்தி ஜநூறு கொடுத்து, உனக்கு செய்வினை செஞ்சிருக்கான். ஒரு செயலுக்கு ஜநூறூ ரூவா வீதம்… மூணு செயலுக்கு ஆயிரத்தி ஜநூறு கொடுத்திருக்கான்.’’

‘‘அந்த எதிரி யாருங்க’’

அம்மா கேட்க…‘‘உன் கணவர் வழி சொந்தம்’’ என்கிறான். கணவர் வழி என்றதும், அம்மாவுக்கு திருப்தி.

‘‘என்ன காரணத்துக்காக செஞ்சிருக்காங்க’’

‘‘பொறாமை… உன் குடும்பம் முன்னேறுகிறதே என்கிற‌ பொறாமை’’

நாங்க, யாருக்கும் எந்த பாவமும் செய்யலியே…எங்களுக்கா இப்படி’’ அம்மா உணர்விழந்து சொல்கிறார்.

‘‘ச்சூ! கண்களை உருட்டி அம்மாவை அதட்டுகிறான். அம்மா மவுனமாகிறார்.

தனது தோள் பையில் இருந்து சின்னதாக ஒரு துணிமூட்டையை எடுத்து, என் முன்னே வைக்கிறான்.

‘‘கட்டெல்லாம் அவுரணும்னு சொல்லி, இந்தகட்ட அவுரு’’ என்றான்.

அவன் சொன்னது போலவே சொல்லி,அந்த துணி மூட்டையின் முடிச்சை அவிழ்க்கிறேன்.எனக்கு உடம்பெல்லாம் தூக்கி வாரி போடுகிறது. அதைப் பார்த்த என் தாயாரோ அலறிவிட்டார்.

அப்போது என் முகத்திலும் அம்மா முகத்திலும் ‘‘பச்’’ என தெளிக்கப்பட்ட தண்ணீர் துளிகளின் குளிர்ச்சி இறங்குகிறது.

அவன் தான் சொம்புத் தண்ணீரை எடுத்து எங்கள் முகத்தில் அடித்திருக்கிறான். கூடவே ‘‘போச்சு சொல்லு, கெட்டதெல்லாம் போச்சு சொல்லு’’ அவன் மூன்று முறை கூற,கிளிப்பிள்ளையாய் திரும்ப நானும் மூன்று முறை கூறுகிறேன்.

என்னிடமிருந்து என்னோவோ, போய்விட்டது போல்… உணர்வு ஏற்படுகிற‌து. கண்கள் மட்டும் பிரிந்து கிடக்கும் துணி மூட்டையிலேயே இருக்கிறது.

எதனாலோ செய்யப்பட்ட ஒரு மனித உருவத்தின், உடல் முழுவதும் கருகருப்பாய் மனித ரோமங்கள். வாய் பகுதியில் அசல் மனித‌ பற்கள்… பார்க்க கோராமாய்…ஒரு மரக்கட்டையில், அந்த உருவத்தை வைத்து அதன் வயிற்றுப்பகுதியில் பதினைந்துக்கு மேற்ப்பட்ட இரும்பு ஆணிகள் அரையப்பட்ட கொடூரம்… காலில் சின்னதாக…அசைவில் சத்தம் தரக்கூடிய மணி கட்டப்பட்டிருக்கிறது.

‘‘ம்ம்…சாத்தான் மீது எழுனூற்றி ஜம்பது ரூபாய் பணம் வை. ஆயிரத்தி ஜநூறில் பாதி’’ அதட்டல் கேட்டு நிமிருகிறேன்.

சீக்கிரம்’’ அவசரப்படுத்துகிறான்.

தற்சமயம் அவ்வளவு ரூபா இல்லையே’’ இழுக்கிறேன்.

‘‘அதெல்லாம் தெரியாது…பக்கத்தில் யாரிடமாவது பணம் வாங்கி வந்து வை. சீக்கிரம்’’ எழுந்து எதிர்வீடு நோக்கி ஓடுகிறேன். ‘‘அவசரம்,எழுநூற்றி ஜம்பது பணம் கொடுங்க, சயந்திரம் தரேன்’’ கடன் வாங்கி வந்து அவனிடம் நீட்டினேன்.

‘‘என்னிடம் நீட்டாதே…சாத்தானிடம் கொடு’’

பணத்தை அந்த பொம்மை மீது வைத்தேன். ‘இனி தாமதிக்க கூடாது. இவன் உடனே இடத்தை காலி செய்துவிட்டால் நல்லது’ என மனம் அலறுகிறது. புறப்படுகிற நேரத்தில், தீடீரென அந்த பொம்மையோடு ஏதோ அரபியில் பேசுகிறான்.கோபம் காட்டுகிறான்.

நிமிர்ந்து பார்த்துச் சொல்கிறான் ‘‘சாத்தான் பிடிவாதம் பிடிக்கிறான். நான் வரமாட்டேன், இங்கேயே இருக்கிறேன் என்கிறான்’’ என்று சொல்ல, நாங்கள் கலவரம் அடைகிறோம்.

மீண்டும் ஏதோ பேசுகிறான்…‘‘ஏய் ஆசைக்கார சாத்தானே, சும்மாயிரு’’ அதட்டுகிறான். பதற்றமாய், என்னைப் பார்த்து சொல்கிறான், ’’நீ அணிந்திருக்கிற தங்க ஆபரண‌ங்களில் ஏதாவது ஓன்று வேண்டுமாம் வாங்கித் தந்தால் வருகிறானாம்’’

அவனது வார்ததைகளை, கேட்ட அம்மா, தன்னையும் அறியாமல்..தனது தாலிச் செயினை பிடித்துக் கொள்கிறார்.

அவனது கண்களோ… என் கைவிரலில் இருக்கும் அரை பவுன் மோதிரத்தை உற்று நோக்கிறது.

வேறு வழியில்லாமல்.. என் கைவிரல் மோதிரம், சில நொடிகளில்…அந்த பொம்மை மீது விழுகிறது.

வேகவேகமாக மோதிரத்தையும் சாத்தானையும் மூட்டைகட்டி விட்டு கூறுகிறான்…‘‘உன்னை சுத்தி வந்த தீயசக்தி..விரட்டப்பட்ட விபரமும், அதை விரட்டிய விதமும் யாருக்கும் தெரியக்கூடது. புரியுதா! தலையாட்டுகிறேன். அந்த மண் பொட்டலத்தை கையில் தந்து விட்டு சொன்னான்…‘‘இதை மூன்று நாளைக்கு உன் தலை மாட்டில் வைத்து படுத்து விட்டு, நான்காம் நாள் ஆற்றில் வீசி ஏறி’’

அவனை அனுப்பி கதவை சாத்திவிட்டு,உள்ளே வந்த நாங்கள்… ஒருவருக்கு ஒருவர் புதிதாக பார்த்துக் கொண்டோம்.

‘‘கர்மம், அப்படியே போய் தலை முழுகுங்கள்’’ என்றாள் என் மனைவி. குளித்துவிட்டு வரும்போது.. வெளியில் சென்றிருந்த என் வயதான தந்தையார் வீட்டிற்குள் நுழைந்தார்.

அவரிடம் என் தாயார் கேட்டார்…‘‘உங்க குடும்ப வழியில, நமக்கு எதிரா செய்வினை செய்யக் கூடியவங்க யாரவது இருக்காங்காளா?’’

குடும்பத்தில், புதிய குழப்பமொன்று உருவாக துவங்கியிருப்பதை உணர்ந்தேன். தொலைபேசியில், அலுவலகத்துக்கு அரை நாள் லீவு சொன்னேன். பணம், மோதிரம் இழந்த மனது.. உள்ளுக்குள் ஆறுதல் தேடி அலைந்தது.

ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியரும், எங்கள் குடும்ப நண்பருமான தியாகராஜனின் நினைவு வந்தது.

குடும்பத்தில் எற்பட்ட பல்வேறு சோதனை காலத்திலும்… தொள் கொடுத்தவர் அவர்…அவரை சந்திக்க தூண்டியது மனது. அவரோ, இதில் எல்லாம் ந‌ம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும் அவரையே சந்திப்பது என் முடிவு எடுத்தேன்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட பேராசிரியார்..‘‘அந்த மண் பொட்டலம் எங்கே ’’ என்றார்.வீட்டில் இருக்கு என்றேன்.எடுத்து வரச் சொன்னார். உடனே அவரிடம், அதைச் சேர்த்தேன்.

அவரது ஆராய்ச்சி மேஜை மீது, அந்த பொட்டலம் பிரிக்கப்பட்டது. அந்த மண்ணை ஒரு விரலால் தடவிப்பார்த்துவிட்டு அருகில் இருந்த இரும்பு காந்த கட்டி ஒன்றை எடுத்து நீட்டினார். உடனே..மண், ஊதுவத்தி துகள்களுக்கு மத்தியில் இருந்து சில இரும்பு துகள்களும் காந்தத்தை நோக்கி புறப்பட்டன.

‘‘இந்த இரும்பு துகள்கள்தான், அந்த பொட்டலம் சுற்றியதற்கான சூட்சமம், மந்திரகோலின் நுனியில் தான் காந்தம் ’’ என்று சொல்லி சிரித்தார் பேராசிரியர்.

இக்கட்டுரை ‘சூ…மந்திரக்காளி ‘ என்ற பெயரில்
நக்கீரன் (7-9-1999) இதழில் வெளியானது.

Monday, November 21, 2011

குழந்தைச் செல்வம் நல்கும் ஈசன்

என்னதான் ஒருவருக்கு அள்ள அள்ள செல்வம் வந்து கொண்டிருந்தாலும் குழந்தைச் செல்வம் என்று ஒன்று இல்லாவிட்டால் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல் போய்விடும்.

இதனால்தான், `குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்றார் வள்ளுவர். இப்படி, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதியரின் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊர்தான் ஆரணி. இங்கு, குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திர காமேட்டீஸ்வரராக இறைவன் அருள் பாலிக்கிறார்.

குழந்தை வேண்டி புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச் சாதமோ, காய்கறி வகைகளுடன் கூடிய சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுக்க வேண்டும். பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.

ஏழாவது திங்களில்


புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோவிலிலேயே இந்த மாலை தருகிறார்கள்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமி அன்று கோவில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம்.

புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம்.