Monday, October 31, 2011

வாசியை பற்றி - கருணாகர சுவாமிகள்

வாசியை பற்றி - கருணாகர சுவாமிகள்


வேதம் பிறந்தது எல்லாம் வாசி ஒன்றை விளக்கவன்ரோ
சேதம் இல்லா வாசியது சமைந்ததுவே அகரமதுள்

நாசியில் சுவாசம் இடும் மனிதனை நம்பாதீர் என்று
இயேசு சொன்ன வசனமிது யாரரிந்து உய்ய வல்லார் ?

வெள்ளிக்காற்றின் உதவியின்றி வாழுகின்ற சித்தர்களும்
களிபுற்று இருக்கின்றனர் ககனம் அதில் காற்றுஇன்றி

கலை பிரள வாசி கற்பம் அறிந்து நாம் பயின்றிடாலோ
நிலை மாறா சுழி அதனில் வாசிலயம் பெற்றிடுமே

வாசிலயம் பெற்றவரே சித்தர்களாம் வையகத்தில்
நாசியில் சுவாசம் ஓடா வெளிகாற்றும் தேவைஇல்லை

வெளிக்காற்று அசுவாசமற்ற சித்தரென்றால் நம்பக்கூடும்
தெளிவப்பட கூறும் இதை அனுபவத்தில் அறிந்திடுவீர்

எட்டுஇரண்டு பதினாறு கலைகள் ஒன்றாய் கட்டிய நீர்
முட்டி நிற்கும் அகரம் அதுள் மூச்சடங்கி வாசியாய்

ஆ என்றால் அசையும் வாசி அக்கேன்றால் அணுவாய் அடங்கும்
ஆஊவும் ஆக்குமே ஆதியந்தம் அக்பர் அதனால்
 

No comments:

Post a Comment