Saturday, December 3, 2011

கண்ணதாசன்

kannadasan,கண்ணதாசன்

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீக குருவாகக் கொண்டவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

படைப்புகள் வனவாசம் (சுயசரிதை)  இயேசு காவியம்  அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)  கண்ணதாசன் கவிதைகள் (7 தொகுதிகள்)  நாவல்  சேரமான் காதலி  விளக்கு மட்டுமா சிவப்பு?  அதைவிட இரகசியம்  ஆச்சி  சிங்காரி பார்த்த சென்னை  பிருந்தாவனம்  ஆயிரங்கால் மண்டபம்  நாடகம்  சிவகங்கைச் சீமை  ராஜ தண்டனை  அனார்கலி  
வாழ்க்கைக் குறிப்பு  பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி  பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி மரபு - தன வணிகர் இயற்பெயர் - முத்தையா உடன்பிறந்தோர் - எண்மர் கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில் உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை 1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி 1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர் 1944 - முதற் கவிதை - முதற் கவிதை 1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர் 1949 சண்டமாருதம் ஆசிரியர் 1949 திரைப்படத் துறை பயிற்சி 1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,  பாடல் கலங்காதேதிருமனமே 1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர் 1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி 1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது 1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது 1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,  1956 முல்லை இலக்கிய மாத இதழ் 1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி 1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை 1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன் 1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம் புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,  தென்றல் திரை நாளிதழ் துவக்கம், 1962-63இல் காங்கிரஸில் இணைப்பு மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர் 1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ் 1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள் 1971, 1975 - மலேஷியா பயணம் 1978 - அரசவைக் கவிஞர் 1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி 1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்) 1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது. புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.  (தொகுப்பு - இராம. கண்ணப்பன் )    நாவல்கள்   அவள் ஒரு இந்துப் பெண்  சிவப்புக்கல் முக்குத்தி  ரத்த புஷபங்கள்  சுவர்ணா சரஸவதி  நடந்த கதை  மிசா  சுருதி சேராத ராகங்கள்  முப்பது நாளும் பவுர்ணமி  அரங்கமும் அந்தரங்கமும்  ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி  தெய்வத் திருமணங்கள்  ஆயிரங்கால் மண்டபம்  காதல் கொண்ட தென்னாடு  அதைவிட ரகசியம்  ஒரு கவிஞனின் கதை  சிங்காரி பார்த்த சென்னை  வேலங்காட்டியூர் விழா  விளக்கு மட்டுமா சிவப்பு  வனவாசம்  அத்வைத ரகசியம்  பிருந்தாவனம்     வாழ்க்கைச்சரிதம்   எனது வசந்த காலங்கள்  எனது சுயசரிதம்  வனவாசம்    கட்டுரைகள்   கடைசிப்பக்கம்  போய் வருகிறேன்  அந்தி, சந்தி, அர்த்தஜாமம்  நான் பார்த்த அரசியல்  எண்ணங்கள்  தாயகங்கள்  கட்டுரைகள்  வாழ்க்கை என்னும் சோலையிலே  குடும்பசுகம்  ஞானாம்பிகா  ராகமாலிகா  இலக்கியத்தில் காதல்  தோட்டத்து மலர்கள்  இலக்கிய யுத்தங்கள்  போய் வருகிறேன்     நாடகங்கள்   அனார்கலி  சிவகங்கைச்சீமை  ராஜ தண்டனை    கவிதை நூல்கள்  கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில் திரைப்படப் பாடல்கள் - 2 பாகங்களில் பாடிக்கொடுத்த மங்களங்கள் கவிதாஞ்சலி தாய்ப்பாவை ஸ்ரீகிருஷண கவசம் அவளுக்கு ஒரு பாடல் சுருதி சேராத ராகங்கள் முற்றுப்பெறாத காவியங்கள் பஜகோவிந்தம் கிருஷண அந்தாதி,  கிருஷண கானம்   thagaval udavi : WWW. Senthamil.org 

No comments:

Post a Comment